Friday, January 13, 2012

பொங்க‌ல் ப‌ண்டிகை எங்க‌ள் பண்டிகை!


உழ‌வ‌னால்...
க‌ழ‌னி திருத்தி
வ‌ய‌லை ந‌ன்கு உழுது
எரு இட்டு
நெல்லினை விதைத்து
க‌ளையெடுத்து,
அறுவடை செய்த நெல்ம‌ணிக‌திர்களை
வீட்டுக்கு கொண்டு வ‌ந்து
புதுநெல்லில் இருந்து
சிறிது எடுத்து
உர‌லில் போட்டு குத்தி அரிசியாக்கி
பொங்க‌ல‌ன்று வீட்டுமுற்றத்தில் கோலமிட்டு
தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து
சாணத்தில் பிள்ளையார் பிடித்து
விளக்கேற்றி வைத்து விட்டு
புதுப்பானையின் கழுத்தில்
புதுமஞ்சளை காப்பாக அணிந்து
பானையினுள் அரிசியும்,பாலும்,
சர்க்க‌ரை பாகும்,
ப‌ருப்பும் இட்டு பொங்கி
இஞ்சியும், க‌ரும்பும்,கற்க‌ண்டும்
இய‌ற்கை தெய்வ‌மான‌ க‌திர‌வ‌னுக்கு ப‌டைத்து
குடும்பத்துடன்
 பொங்கலோ‌ பொங்கல்‌என்று உறக்க‌ கூவி
கொண்டாடி ம‌கிழும் விழாவே
பொங்க‌ல் பண்டிகை!
பொங்க‌ல் ப‌ண்டிகை
எங்க‌ள் பண்டிகை!
ஒவ்வொரு த‌மிழ‌னின் பண்டிகை!

No comments:

Post a Comment

நிலக்கடலையும் அதன் பயன்களும்

முனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...