பொதிகையில் பிறந்தவளே
மதுரையில் வளர்ந்தவளே
ஐம்பெருங்காப்பியங்கள் படைத்தவளே
திருவாசகமும் இராமாயணமும் கண்டவளே
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
கலிங்கத்துப்பரணிக்கு சொந்தமானவளே
இயல் இசை நாடக முத்தமிழே
திராவிட மொழிகளின் தாயே
தாய்மொழியாம் தமிழ் மொழியே
தமிழனின் அடையாளமே
உன்னை...
திரைப்பட உரையாடல்
தெருக்கடைகளின் பெயர்கள்
கல்விக்கூடங்களில்
நாகரிக மோகத்தால்
ஆங்கில மொழியை
தமிழ் மொழியுடன் கலந்து பேசி
தமிழ் மொழியை மெல்ல சாகாடிக்குறோமே...
நாமெல்லாம் தமிழர்தானா...?
No comments:
Post a Comment