நாளேடுகளில் இராசி பலன்
பார்த்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.
இந்தியாவில்
ஊழல் அறவே ஒழிந்திட வேண்டும்.
படித்தவர்களே அரசியலுக்கு
வர வேண்டும்.
மொல்லமாரிகளையெல்லாம் சாமியாராக்கி
அவன் பாதம் தொட்டு வணங்குவதை நிறுத்த வேண்டும்.
பண்பாட்டினை சிதைக்கும் படங்களை
பார்ப்பதை நிறுத்த வேண்டும்.
தொல்லைதரும் தொலைக்காட்சி தொடர்களை
பார்ப்பதை நிறுத்த வேண்டும்.
இளைஞர்கள், நடிகர்களை தலையில்
தூக்கிவைத்தாடுவதை நிறுத்த வேண்டும்.
கோடிகோடியாய் கொல்லையடிக்கும் அரசியல்வாதிக்கு
கொடிபிடிப்பதை நிறுத்த வேண்டும்.
பெண்கள் இரவு சமாச்சாரத்திற்கு மட்டும்தான்
எனும் ஆணாதிக்கம் ஓழிய வேண்டும்.
தமிழ் மொழியினை அழிந்திடாமல்
காத்திட வேண்டும்.
தமிழனுக்கென்றொரு நாடு புதிதாய்
உதித்திட வேண்டும்.
tamizha tamizha nalai nam nalae
ReplyDeletetamizha tamizha nam nadu marivedumae!
ஆமாம், ஆயிரம் பெரியார் வந்தாலும் மாற்ற முடியாது. இருப்பினும், இந்த கவிதையில் மக்களுடைய அறியாமையை கூறிள்ளேன். கருத்து எழுதியமைக்கு நன்றி.
ReplyDelete