Tuesday, July 5, 2011

இராஜேந்திர சோழன்


இராஜராஜ சோழனின் புதல்வனே
அயல் நாட்டிற்கு படையெடுத்த
முதல் இந்திய மன்னனே!

ஈழத்தை போரிட்டு
ஐந்தாம் மஹிந்தா-வை வென்றவனே!

உனது ஆட்சி காலத்தில்
சிங்கப்பூர், மலேசியா,
சுமத்திரா நாடுகளை
போரில் வென்று ஆட்சி புரிந்தவனே!

கங்கை  வரை சென்று
வங்கதேசத்தை வென்று
சோழமண்டலத்திற்கு
கங்கை கொண்ட சோழபுரத்தினை
புதிய தலைநகராய் தந்தவனே!

கங்கை கொண்ட சோழபுரத்தில்
தஞ்சைக்கு நிகரான
சிவன் கோவிலை கட்டியவனே!

கடல்கடந்து
கடாரம் நாட்டை கைப்பற்றிய‌
கடாரம்கொண்டானே!

உலகிற்கு தமிழனின்
வீரத்தை பறைசாற்றிய‌
கங்கைகொண்ட சோழனே!

வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த‌
உன் புகழ் நீடுழி வாழியவே...!

1 comment:

  1. மாவீரன் இராசேந்திர சோழ தேவர் பற்றிய உங்களது கவிதை மிகவும் அருமை!

    தொடரட்டும் உங்களது தமிழ்ப்பணி!

    ReplyDelete

நிலக்கடலையும் அதன் பயன்களும்

முனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...