Tuesday, August 2, 2011

குளோனிங் பசுவில் கிடைக்கும் தாய்ப்பால்


அறிமுகம்
அறிவியல் வளர்ச்சியில் உயிரி தொழில்நுட்பம் (Biotechnology) மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதற்கான மற்றுமொரு உதாரணம்  தான் இந்த குளோனிங் பசுவில் கிடைக்கும் தாய்ப்பால். இதற்கு முன்பு ஸ்காட்லான்டில் உள்ள ராஸ்லான்ட் நிறுவனத்தில் 1997 ஆம் ஆண்டு முதன் முதலாக குளோனிங் ஆடு (அ) படியாக்க ஆடு  டோலி  (Dolly) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு ஆஸ்ட்ரேலியாவில் குளோனிங் பசு (அ) படியாக்கம் செய்த பசு 2000ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு சுசி  (Suzi) என்று பெயரிடப்பட்டது. இந்த குளோனிங் பசு சுசி யிலிருந்து கிடைக்கும் பால் மற்ற சாதாரண பசுக்களின் பாலைப் போல் இருந்தது.  இதற்கு பிறகு குளோனிங் மூலம்  பன்றி, எலி, பூனை மற்றும் நாய் போன்ற பல்வேறு விலங்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.

எவ்வாறு உருவாக்கப்பட்டது?
தற்போது  அர்ஜென்டினா விஞ்ஞானிகளால் உலகில் முதன் முறையாக  குளோனிங் பசுவின் பால் தாய்ப்பாலுக்கு சமமானது என கண்டறியப் பட்டுள்ளது. இந்த படியாக்கம் செய்த பசுவிற்கு (குளோனிங் பசு) ரோஸிட்டா ஐஎஸ்ஏ (Rosita ISA) என்று பெயரிடப்பட்டுள்ளது.  தாய்பாலில் உள்ள லாக்டோபெரின் (Lactoferrin) மற்றும் லைசோசைம் (Lysozyme) எனும் இரண்டு புரதங்களை படியாக்கம் (குளோனிங்) தொழில்நுட்பம் மூலம் உட்செலுத்தி பெறப்பட்டதே இந்த குளோனிங் பசு ஆகும். மேலும் இந்த  லாக்டோபெரின் மற்றும் லைசோசைம் புரதங்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நச்சுயிரிகளுக்கு நோய் எதிர்பு திறனுடையது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய‌ ஆராய்ச்சியை அர்ஜென்டினைன் நிறுவனம் மற்றும்  சான் மார்டின் தேசிய பல்கலைக் கழகமும் இணைந்து  செய்துள்ளது.

3 comments:

  1. சுவாரசியமான தகவல்

    ReplyDelete
  2. science and technology never ends...

    ReplyDelete
  3. பின்னூட்டம் (Reply) அனுப்பியதற்கு நன்றிகள் நண்பர்களே

    ReplyDelete

நிலக்கடலையும் அதன் பயன்களும்

முனைவர் க. அசோக்குமார் உதவிப் பேராசிரியர் வேளாண் துறை, பிரிஸ்ட் பல்கலைக்கழகம், வல்லம், தஞ்சாவூர், 613 403. அறிமுகம்: நிலக்...